ஈழ எழுத்தாளர் வ.அ. ராசரத்தினம்

ராசரத்தினத்தின் பேரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது ஜெயமோகனின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் பட்டியல் மூலமாகத்தான். தோணி சிறுகதையை ஜெயமோகன் தன் பட்டியலில் சேர்த்திருந்தார். தோணி சர்வநிச்சயமாக என் பட்டியலில் வராது. நல்ல சித்தரிப்பு உள்ள சிறுகதைதான், ஆனால் அய்யகோ என்ன கொடுமை இது சரவணன் தொனியை அவரால் முற்றாகத் தவிர்க்க முடியவில்லை. தவிர்த்திருந்தாலும் என் பட்டியலில் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

ராசரத்தினம் ஈழ எழுத்தாளர். அதுவும் முன்னோடி எழுத்தாளர். அவரது இலக்கிய நினைவுகள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் காலத்தில், அவரது ஊரான மூதூரில் நான் பிறந்து வளர்ந்திருந்தால் நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். வாசிப்பில் முழுகி இருப்பேன், அனேகமாக ஒரு பள்ளி ஆசிரியராகத்தான் போயிருப்பேன். எழுதி இருப்பேனா என்பதுதான் சந்தேகம். நிச்சயம் முயன்றிருப்பேன். அவரது அனுபவங்களைப் படிக்கும்போது நானும் இப்படித்தான் உணர்ந்திருப்பேன், நானும் இப்படித்தான் செய்திருப்பேன் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

கிரௌஞ்சப் பறவைகள் (1975) என்ற கொடுமையான வரலாற்று நாவலையும் எழுதி இருக்கிறார்.

ஒரு வெண்மணல் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது நாவல் மெய்நிகர் அனுபவம் – அன்றைய ஒரு கிராம சூழலை விவரிக்கிறது. ஆனால் சுவாரசியமே இல்லை.

மொத்தத்தில் நான் பரிந்துரைப்பது அவரது இலக்கிய நினைவுகள் புத்த்கம், தோணி சிறுகதை மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஈழ எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்: