என் சிறுகதை – காமம் காமம் என்ப

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு,
விருந்தே காமம் பெருந்தோளோயே!

எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. எனக்கே கற்பூர வாசனை தெரியும் கவிதை.


சொல்வனம் இதழில் என் சிறுகதை ஒன்று – காமம் காமம் என்ப – வெளியாகி இருக்கிறது. சொல்வனம் ஆசிரியர்களுக்கு என் நன்றி!

இந்தச் சிறுகதையை எழுதி 15 வருஷமாவது இருக்கும். இளம்பெண்ணின் sexual awakening, ஆண்களை தனக்கு அடிமைப்பட வைக்க முடியும் என்று ஒரு பெண் உணர்வதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பல வருஷங்களுக்கு முன் படித்த, எம்.வி. வெங்கட்ராம் எழுதிய மங்கலாகவே நினைவிருக்கும் பெட்கி  சிறுகதைதான் inspiration. மேலே சொன்ன கவிதையை அப்போதுதான் படித்திருந்தேன். உடனே இந்தக் கரு தோன்றி எழுதினேனே.

ஆனால் சரியாக வரவில்லை என்று தோன்றியது, ஜெயமோகனிடம் காட்டினேன். சகிக்கவில்லை என்றார் 🙂 சரி இறந்த பிறகும் எம்விவி நொந்துவிடப் போகிறார் என்று அமுக்கிவிட்டேன். ஏதோ பழைய குப்பைகளை (backups) புரட்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதும் தூசு தட்டினேன். நண்பர் சுந்தரேஷ் இதெல்லாம் ஒரு கதையா என்று அலுத்துக் கொண்டார். விசு கொஞ்சம் தாட்சணியம் பார்த்து சில இடங்கள் பரவாயில்லை, அம்மா பாத்திரம் நன்றாக இருந்தது, ஆனால் விஜயராகவாச்சாரியார் சபலப்படுவதும் நாயகி வெகு அலட்சியமாக அடுத்த கிழவன் என்று சிந்திப்பதும் திடீர் மாற்றங்களாக இருக்கின்றன என்று சொன்னார். இருந்தாலும் கரு வலுவானது என்று தோன்றியதால் சொல்வனம் இணைய இதழுக்கு அனுப்பினேன், என் அதிருஷ்டம், அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

படித்துப் பாருங்கள்! முடிந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்!

சரஸ்வதி தியாகராஜன் ஒலிவடிவமாக்கி இருக்கிறார், அவருக்கு என் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்: