சாண்டில்யனின் ராஜபுதனக் கதைகள்

sandilyanசாண்டில்யனின் மனதுக்கு நெருக்கமான புத்தகம் Colonel James Tod எழுதிய Annals and Antiquities of Rajasthan என்றுதான் தோன்றுகிறது. ravi_varma_painting_of_rana_pratapமீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு வரியை எடுத்து அதை ஒரு சின்ன கதையாக எழுதுவார். ராஜபுத்திர வீரர்கள், ராணாக்கள், ராணிகளைப் பற்றி எழுதும்போது அவரே மிகவும் என்ஜாய் செய்து எழுதுவது போலத் தெரியும். சிறு வயதில் சேரன் சோழன் பின்புலக் கதைகளை விட நீண்ட அங்கிகளும் இடையில் தொங்கும் வாள், கச்சையில் ஒரு குறுவாள், தலைப்பாகை அணிந்த வீரர்களும் பெருத்த மார்புகளை சரியாக மூடாத இளவரசிகளும் நடை போடும் இந்தக் கதைகள் exotic ஆக இருந்தன, இவற்றின் கவர்ச்சியை மேலும் அதிகரித்தன. நன்றாகப் புரியக்கூடிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மாதிரி பேர்களை விட கேள்விப்பட்டே இருக்காத சந்தாவத், ஜாலா மாதிரி பேர்கள் வேறு இந்தக் கவர்ச்சியைக் கூட்டின. அதுவும் ஜீவபூமி, மஞ்சள் ஆறு, நாகதீபம் போன்ற நாவல்களை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். ராணா சங்காவும் ராணா அமர்சிங் ஜஹாங்கீரோடு சமரசம் செய்து கொண்டதும் நினைவிருப்பது இந்தப் புத்தகங்களின் மூலம்தான். இன்று கூட மேவார் அரசுதான் ராஜபுதன அரசுகளில் first among equals என்ற பிம்பம் இருக்கிறது!

அவரது ராஜபுதனக் கதைகளைப் பற்றி இங்கே சின்ன சின்ன குறிப்புகளைத் தந்திருக்கிறேன். இவற்றைத் தொகுத்து ஒரு omnibus ஆகப் போடலாம்.

ராணா ஹமீர்: மேவார் ராணா வம்சம் அழியும்போது தூரத்து சொந்தமான ராணா ஹமீர் ஒரு palace coup மூலம் முடிசூடினான் என்ற வரலாற்றை கதையாக எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.

rajasthan-mapமலை அரசி: ராவ் ஜோடா ஜோத்பூர் நகரத்தை உருவாக்கினார், மார்வாரின் அரசர் என்பது வரலாறு. அதை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். ராவ்ஜோடா பல ராஜபுதன வம்சாவளிகளுக்கு மூதாதையர். விக்கி குறிப்பைப் படித்துப் பாருங்கள்.

மஞ்சள் ஆறு: ராணா சங்கா பட்டமேற்பதில் இருந்த பிரச்சினைகள், பாபரோடு போர். தவிர்க்கலாம்.

மண்மலர்: ராணா பிரதாப் அக்பரை தனியாக எதிர்த்து நின்றார் என்பது வரலாற. அவருக்கும் ராஜா மான்சிங்குக்கும் இருந்த பூசல்களைப் பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார். படிக்கலாம்.

நாகதீபம்: ராணா பிரதாப்பின் காலத்துக்குப் பிறகு ஜஹாங்கீரிடம் ராணா அமர்சிங் சமாதானம் செய்துகொண்டான் என்பது வரலாறு. அந்த சமாதானத்தின் பின்புலத்தில் ஹரிதாஸ் ஜாலா என்ற வீரனை ஹீரோவாக்கி, அவன் மேவாரின் ஒரு ரத்தினத்தை ஜஹாங்கீரிடம் சேர்த்தான் என்று கதை. டைம் பாஸ்.

ஜீவபூமியில் எவ்வளவு தூரம் சரித்திரம் என்பது தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் ஒரு ராஜபுத்திர வீரனை வைத்து எழுதி இருக்கிறார்.

உதயபானு: அவுரங்கசீப்பின் தளபதி நூர் அலியை உதயபானு தோற்கடித்தான் என்ற ஒரு வரியை கதையாக்கி இருக்கிறார். தவிர்க்கலாம்.

மோகினி வனம்: ராணா பீம்சிங் என்ற பிற்கால ராணா காலத்தில் மேவார் அரசு உள்நாட்டுப் பூசல், மராத்தியர் ஆதிக்கம் காரணமாக மெதுமெதுவாக செயலிழந்ததை வைத்து ஒரு கதை. கதாபாத்திரங்கள் consistent ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் சாண்டில்யன் கவலைப்படவே இல்லை. முதல் அத்தியாயத்தில் அதிகார வெறி உள்ளவளாக வரும் ராஜமாதா இரண்டு மூன்று அத்தியாயங்களில் நாட்டு நலனுக்காக தன் மரியாதையை விட்டுக் கொடுத்து அடுத்தவரிடம் கெஞ்சுகிறாள். பல துணைப்பாத்திரங்களின் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

இளையராணி: இன்னொரு ராஜபுதனக் கதை. இளவரசன் அமரன் சித்தியின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்பர் ராஜகுமாரி ரஜனியை மணக்கிறான்.

ராணியின் கனவு: ராஜபுதன பின்புலத்தை வைத்து கதைகள். டைம் பாஸ்.

சந்திரமதி: ராணா அமரசிம்மனை வைத்து ஒரு கதை.

இதைத் தவிரவும் நிறைய எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் பிடித்த ராஜபுதனக் கதைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்