கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதிவு.
பொதுவாக எனக்கும் கவிதைகளுக்கும் கொஞ்சம் தூரம். ஆனால் இந்த இரண்டு கவிதைகளையும் ரசித்தேன். முடிந்தால் ஒரு கட்டைக்குரலில் கற்பனை செய்துகொள்ளுங்கள்!
தலைவரார்களேங்….
தமிழ்ப் பெருமக்களேங்… வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பை
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித் தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோம் நாம்”‘‘வண்ணாரப்பேட்ட கிள சார்பில் மாலெ”
‘‘வளமான தாழிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய் வா என்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொக வாழ்வய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொனக்குவ்யல் காண்போமின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரி மதி படைத்தோரை ஒழிப்போம் வாரிர்தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிரு கூட்டம் பேசவிருப்பதால்
விடய் பெறுகிறேன் வணக்கொம்இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள் அமைதி… அமைதி
இன்னும் ஒன்று:
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதை விட மாட்டேன்
தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்
தொடர்புள்ள சுட்டி: ஞானக்கூத்தன் தளம்
ஐயோ!! சிரித்து வயிறு புண்ணாகிறது. கவிதைக்குப் பின் இருக்கும் உணர்வுகளும் புரிகிறது.
LikeLike
கட்டைக்குரல் மட்டுமல்ல தரைகூட்டும் அங்கவஸ்திரம் மிகவும் அவசியம்.
LikeLike
பலராமன், விஜயன், நீங்களும் இந்த குசும்பை ரசித்தது தெரிந்து மகிழ்ச்சி!
LikeLike
தேங்கா சீனிவாசன் மற்றும் ஜனகராஜ் பேசுவது போல எண்ணி வாசித்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை. பகிர்விற்கு நன்றி.
LikeLike
அருமையான கவிதைகள்.
LikeLike
சென்னைப்பித்தன், ஞானக்கூத்தன் கவிதைகளை நீங்கள் ரசிப்பது மகிழ்ச்சி!
சித்திரவீதிக்காரன், ஜனகராஜ்/தேங்காய் கற்பனையை நானும் செய்துபார்க்கவில்லை. இப்போது லூஸ் மோகன் குரலில் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன். 🙂
LikeLike