சுப்ரபாரதிமணியன் தளத்தில் என் பதிவு

இன்று எதேச்சையாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் தளம் பக்கம் போனேன். அவர் என்னுடைய ஒரு பதிவை அங்கே வெளியிட்டிருப்பதைக் கண்டு அப்டியே ஷாக்காயிட்டேன். ரொம்ப நாளைக்கு முன்னால் அவரது அப்பா என்று சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதி இருந்தேன். அதை ஒரு பொருட்டாக மதித்து அவர் மீள்பதித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

எனக்கு அப்பா சிறுகதைத் தொகுப்பு பிரமாதம். ஆனால் அதைப் படிப்பதற்கான மெச்சுரிடி 25 வருஷத்துக்கு முன்னால் அதை வாங்கியபோது எனக்கு இல்லை. புத்தகத்தை விடுங்கள், அதற்கு சுஜாதா எழுதிய முன்னுரை கூட அப்போது சரியாகப் புரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்தான் அதில் உள்ள subtle ஆன சில கதைகள் புரிந்தன.

சுப்ரபாரதிமணியன் ஒரு acquired taste என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன். அவரது கதைகளில் யதார்த்தம் அதிகம், சுவாரசியம் குறைவு. அதை அவர் வேண்டுமென்றேதான் தன் பாணியாக வைத்திருக்கிறார். கவனமாகப் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையா என்று தோன்றிவிடலாம். எந்த அற்ப விஷயத்திலும் ஒரு கதையைக் காண்பதுதான் அவரது ஸ்பெஷாலிடி – வெயில் காலத்தில் மரத்தடியில் ஒருவன் தூங்குகிறான் என்பதெல்லாம் அவருக்கு கதைக்கரு. அவரது சாயத்திரை எடுத்து வைத்திருக்கிறேன், இந்த வருஷம் முடிவதற்குள்ளாவது படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: என் ஒரிஜினல் பதிவு