வாசந்தியின் சில புத்தகங்கள்

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)

வாசந்திக்கு இதழியலாளர் என்ற ஒரு முகமும் உண்டு. இந்தியா டுடே பத்திரிகையின் தமிழ்ப் பதிப்புக்கு சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அருகாமையில் இருந்து பார்த்திருக்கிறார். அந்த நினைவுகளை வைத்து தமிழகத்தின் அரசியல் சூழலை Cutouts, Castes and Cine Stars (2006) என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதைப் படித்ததால்தான் மூலப்பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

Cutouts, Castes and Cine Stars சராசரி தமிழனுக்கு புதியதாக எதையும் சொல்லிவிடப் போவதில்லை. தினமும் நாளிதழ் படிக்கிறோம், பத்திரிகை பார்க்கிறோம், தொலைக்காட்சியில் செய்திகளை கேட்கிறோம். அவற்றை எல்லாம் ஒருங்கமைதியோடு தொகுத்து எழுதுவதைப் போலத்தான் இந்தப் புத்தகம் இருக்கிறது. ஆனால் மற்ற மாநில இந்தியர்களுக்கு நிச்சயமாக தமிழகத்தின் அரசியல் சூழலைப் புரிய வைக்கும். ஈ.வே.ரா.வின் தாக்கம், காங்கிரஸின் அழிவு, தி.மு.க. எப்படி குடும்பக் கட்சியாக மாறியது, கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற முக்கோணம், வெளிப்படையான ஜாதி அரசியல் எப்படி பா.ம.க.வோடு ஆரம்பிக்கிறது, தலித்கள் எப்படி “இடை ஜாதிகளால்” இன்னும் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக விவரிக்கிறது. இன்று கட்சி சார்பற்ற பொதுப்புத்தி இந்த நிகழ்ச்சிகளை எப்படிப் பார்க்குமோ, அதுதான் இந்தப் புத்தகம். தமிழர்களும் படிக்கலாம், ஆனால் பிற மாநில மனிதர்களுக்கு இன்னும் பயனுடையதாக இருக்கும்.

Vaasanthiஎழுத்தாளர் வாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

வாசந்தியின் சில கதைகள்

Vaasanthiவாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

nhmbadri_seshadriசமீபத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது கிழக்கு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தமிழ் நாவல்களை பற்றிய ஒரு சுட்டி கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவற்றில் முக்கால்வாசியாவது தமிழின் முக்கிய நாவல்கள் பட்டியலில் இடம் பெறுபவை, அதிகமாக விற்காத இலக்கியப் புத்தகங்கள். இவை எல்லாம் பிரமாதமாக வியாபாரம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கிழக்கு பதிப்பகம் லாப நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் நிறுவனமோ, சாகித்ய அகாடமியோ, நேஷனல் புக் ட்ரஸ்டோ இல்லை. அப்படி இருந்தும் இதைச் செய்திருக்கும் பதிப்பகத்துக்கும் அதன் நிறுவனர் பத்ரி சேஷாத்ரிக்கும் ஒரு ஜே போட வேண்டுமென்று தோன்றியது, அதனால்தான் இந்தப் பதிவு.

தமிழ் படிக்கத் தெரியாத, படிக்கும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள்!

மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் நாவல்களின் பட்டியல்: ஆங்கிலப் பெயர் அடைப்புக்குறிக்குள்.

சா. கந்தசாமியின் “சூர்ய வம்சம்” (Sons of the Sun)
இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” (Surrendered Dreams)
கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”
இரா. முருகனின் “அரசூர் வம்சம்” (Ghosts of Arasur)
யூமா. வாசுகியின் “ரத்த உறவு” (Blood Ties)
இ.பா.
      Ashes and Wisdom
      சுதந்திர பூமி (Into this Heaven of Freedom)
      தந்திர பூமி (Wings in the Void)
      கிருஷ்ணா கிருஷ்ணா (Krishna Krishna)
சிவசங்கரி
      Deception
      பாலங்கள் (Bridges)
ஹெப்சிபா ஜேசுதாசனின் “புத்தம்வீடு” (Lizzie’s Legacy)
விஜயராகவனின் “Twice Born”
ஜெயகாந்தன்
      ரிஷிமூலம் (Rishimoolam)
      ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (Once an Actress)
      உன்னைப் போல் ஒருவன்
நீல. பத்மநாபனின்பள்ளிகொண்டபுரம்” (Where the Lord Sleeps)
அசோகமித்ரன்
      இன்று (Today)
      கரைந்த நிழல்கள் (Star-Crossed)
பி.எஸ். ஸ்ரீயின் “Temple Elephant” (சிறுவர் புத்தகம் என்று யூகிக்கிறேன்.)
ஆதவன்
      காகித மலர்கள் (Paper Flowers)
      என் பெயர் ராமசேஷன் (I, Ramaseshan)
வாசந்தியின் ஆகாச வீடுகள் (A Home in the Sky) – நன்றி, ஜடாயு!

கௌசல்யா சப்தரிஷியின் “TamBrahm Bride”, விஜயராகவனின் “Twice Born” எல்லாம் தமிழ் நாவல்தானா? ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

இ.பா.வின் “Ashes and Wisdom”, சிவசங்கரியின் “Deception”, வாசந்தியின் “A Home in the Sky” ஆகியவற்றுக்கு ஒரிஜினல் தமிழ்ப் பெயரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

TamBrahm Bride மற்றும் Ashes and Wisdom இரண்டும் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்பட்டவை, TamBrahm Bride சும்மா pulp என்று ஜடாயு தகவல் தந்திருக்கிறார். இவற்றைத் தவிர ஜெயமோகனின்காடு” (Forest) புத்தகமும் ஆங்கில மொழிபெயர்ப்பாக கிழக்கு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தமிழில் பெண் எழுத்தாளர்கள்

இந்தச் சுட்டிதான் இந்தப் பதிவை எழுதக் காரணம். தமிழில் பல பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்த குங்குமம் தோழிக்கு ஒரு ஜே!

ஆனால் இந்த ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்ற பிரிவே மிகவும் செயற்கையாகத்தான் தெரிகிறது. பெண்களைப் பற்றி ஒரு பெண் எழுதுவதைப் போல ஒரு ஆணால் எழுத முடியாது என்பதெல்லாம் முட்டாள்தனம். சாபவிமோசனத்தை, பொன்னகரத்தை விடவா ஒரு பெண்ணிய சிறுகதை?

வசதிக்காக பெண்(ணிய) எழுத்து என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் எனக்கு ஒத்து வருவதில்லை. விகடன், குமுதம், கல்கியில் பெண்களின் துயரம் பற்றி பக்கம் பக்கமாக தொடர்கதைகள் வரும். அதைப் படித்து வெறுத்துப் போன ஒரு கோஷ்டி என் தலைமுறையில் இருக்கிறது. சின்ன வயதில் சிவசங்கரி மீது எக்கச்சக்க கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று வயதான பிறகு மீள்பரிசீலனை செய்யும்போது சிவசங்கரி முயற்சி செய்திருக்கிறார், ஆனால் தோல்வி என்று தெரிகிறது. எப்பப் பார்த்தாலும் உயரமான வெள்ளை நிற ரிம்லெஸ் கண்ணாடி அணிந்த ஆண்கள் பற்றி வர்ணிக்கும் இந்துமதி எப்படித்தான் தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரே ஒரு இலக்கியம் நயம் உள்ள கதையை எழுதினார் என்று நான் வியந்திருக்கிறேன். லட்சுமி, அனுராதா ரமணன், கமலா சடகோபன் போன்றவர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண் கவிஞர், குட்டி ரேவதி, சல்மா, கனிமொழி என்றால் நான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவேன்.

உருப்படியாக எழுதியவர்கள் அவ்வளவு பிரபலம் ஆகாத கிருத்திகா (வாசவேஸ்வரம்), ஹெப்சிபா ஜேசுதாசன் (புத்தம் வீடு) மாதிரி சிலரே. நான் இது வரை விரும்பிப் படித்த ஒரே பெண்ணிய எழுத்தாளர் அம்பை மட்டுமே. ஓங்கி ஒலிக்கும் குரல்தான்; ஆனாலும் இலக்கியம்தான். வாசந்தியைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். வாசந்தி தவிர்த்த மற்றவர்களை நான் ஒரு இருபது வயதுக்கு அப்புறமே படித்திருக்கிறேன். இருபது வயதுக்கு மேல் அஞ்சலி எழுதவோ, இல்லை வேறு ஏதோ காரணத்துக்கோ சிவசங்கரியையும் இந்துமதியையும் படிக்கும்போது கடுப்பு அதிகம்தான் ஆகிறது.

இந்த prejudice-ஆல் நான் பொதுவாக பெண் எழுத்தாளர்களை தவிர்த்தே வந்திருக்கிறேன். அதிலும் ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கேள்வி. இருந்தாலும் ஒரு தயக்கம். எனக்கு குங்குமம் தோழியின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளது. ஒன்று இரண்டு சிறுகதைகளைப் படித்துவிட்டு பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

வாசந்தியின் “நிற்க நிழல் வேண்டும்”

Vaasanthiஜெயமோகனின் social romances பட்டியலில் இடம் பெறும் நாவல். என் கண்ணில் இதை வணிக இலக்கியம் என்பது இதன் வீச்சைக் குறுக்குவது ஆகும். எனக்கு இது இலக்கியமே. சமகால (Contemporary) வரலாற்று நாவல் என்று சொல்லலாம்.

பின்புலம் இலங்கைத் தமிழர்கள். கதையின் காலம் எண்பதுகளின் நடுவில். இந்தியா ஒரு காலத்தில் விமானப் படையை அனுப்பி உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் போட்டது. அந்த நிகழ்ச்சி பெரிதாக விவரிக்கப்படுகிறது. துரையப்பா கொலையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பின்னால் வரை.

ஒரு தமிழ் இளைஞன்-இளைஞி, ஒரு பத்திரிகை நிருபன் இவர்கள் கோணத்திலிருந்து கதை. எல்லார் பக்கத்தையும் காட்டுகிறது. போராளிகள் போராட ஏன் ஆரம்பித்தார்கள், ஆனால் பிற்காலத்தில் எப்படி பரிணமித்தார்கள், சிங்களர்களின் அடக்குமுறை, இந்தியாவின் அரசியல் விளையாட்டுகள், அகதிகள், இலங்கையிலிருந்து கள்ளத் தோணி வழியாக தப்பிப்பவர்கள், ஏன் தமிழர்களின் மீது அடக்குமுறை சரியே என்று வாதிடும் சிங்களர்களைக் கூட விடவில்லை.

கதையின் குறை என்றால் கதையின் ஒரே சரடான காதல் அழுத்தமாக இல்லாததுதான். கதையே எல்லார் பக்கத்தையும் காட்ட பயன்படுத்தப்படும் ஒரு சட்டகம்தான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


சிவா கேட்டதற்காக pdf வடிவத்தில். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்.

நண்பர் ராஜ் சந்திரா சொல்கிறார்:

இந்த நாவல் பிரபாகரனை மிகவும் வருத்தம் (அல்லது கோபம்) கொள்ள வைத்திருக்கிறது. 2002-ல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டபோது வாசந்தி பிரபாகரனை பேட்டி எடுக்க விரும்பினார். ஆனால் பிரபாகரன் இந்த நாவலைக் காட்டி பேட்டி கொடுக்க மறுத்தார். வாசந்தியே ஒரு கட்டுரையில் இதை விரிவாக எழுதியிருக்கிறார். அனிதா ப்ரதாப் போன்று ஒரு பிரமிப்பில் வாசந்தி இல்லாதது பிரபாகரனை ஏமாற்றம் கொள்ள வைத்திருக்கலாம்.

கதை வந்த காலத்தில் அவ்வளவாகப் பரபரப்பு ஏற்படுத்தவில்லை. கல்கியில் வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் (சர்க்குலேஷன் கம்மி). விகடன், குமுதத்தில் வந்திருந்தால் எதிர்ப்பு பலமாக இருந்திருக்கலாம். ஆனால் வாசந்தி காட்ட முயன்ற போராளிகள் வாழ்க்கை பொது ஊடகங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. சீலன் போராளியாக இருந்தாலும் அவனால் இயக்கத்தின் கொடூரங்களோடு ஒன்ற முடியவில்லை. அதுவே நம் தமிழ் (போலி) ஆதரவாளர்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கலாம்.

இந்தக் கதை தமிழ்ப் போராளிகளின் அனைத்துக் கோணங்களையும் வைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் (அப்படி செய்ய வேண்டுமா என்பது வேறு). ஒரு இந்தியப் பத்திரிக்கையாளனின் அனுபவங்களாக அது முடிந்து போனது. சில இடங்களில் கதை தானானவே எழுதிக்கொண்டு சென்றதை உணர முடியும் (உதா-சீலனும், அவன் தந்தையும் 83 கொழும்புக் கலவரத்தில் சிக்குவது, அதன் பின் சீலன் மாறுவது).

இந்த நாவலோடு ஷோபா சக்தி-யின் ‘ம்’ படிக்கவேண்டும். அதில் இன்னும் தெளிவாக இயக்கங்களுக்கிடையேயான மோதல்கள், மற்றும் வெலிக்கிட சிறை கொலைகள் விவரிக்கப்பட்டிருக்கும் (மென் மனதாளர்கள் விலகவும்). அவரின் தளத்தில் இலவசமாக pdf கிடைக்கிறது. Just a trivia: அசோகமித்திரனின் ஒரு சிறுகதை வெலிக்கிட சிறைக் கொலைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.

நிச்சயம் படிக்கவேண்டிய நாவல்.


இந்த நாவல் உருவான கதையைப் பற்றி வாஸந்தி:

ஒரு நாள் வெற்றிச்செல்வன் என்ற பெயர் கொண்ட ஓர் இலங்கைத் தமிழர் என்னைக் காண வந்தார். தான் சில காலமாக தில்லியில் இருப்பதாகச் சொன்னார். அன்று காலை அவரது தலைவர் லண்டனில் இருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து, என்னைச் சந்திக்கச் சொன்னதாகச் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“யார் உங்கள் தலைவர்?” என்றேன்.

“அது கதைக்க இயலாது” என்றார் புன்சிரிப்புடன்.

வெற்றிச்செல்வனுக்கு சிவந்த உப்பிய கன்னங்கள். சிரிக்கும்போது கண்கள் அமுங்க, கன்னங்கள் பளபளத்தன. குழந்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. அவரது தமிழ் எனக்குப் புதுமையாக இருந்தது. உச்சரிப்பின் ராகம் ஆகர்ஷித்தது. ஆனால், அந்தப் பூடகப் பேச்சு எனக்குப் புதிது. எனது குழப்பத்தைக் கவனித்த வெற்றிச்செல்வன், தான் ஒரு இலங்கைத் தமிழர் என்றும் தமிழரின் விடுதலைக்காகப் போராடும் ஒரு போராளிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் சொன்னார். அவரது தலைவர் உயிருக்கு மற்ற ஒரு போராளிக்கும்பலால் ஆபத்து ஏற்பட்டவுடன் தலைமறைவாக லண்டனில் இருப்பதாகச் சொன்னார்.

“எதற்கு என்னைப் பார்க்கச் சொன்னார் உங்கள் தலைவர்?” என்றேன் இன்னமும் புரியாமல்.

“அவர் உங்கள் ‘மௌனப் புயல்’ நாவலை வாசிச்சிருக்கார். சீக்கியர்களுக்கு ஆதரவாக நீங்கள் எழுதியிருக்கும் நேர்மையைப் பாராட்டுகிறார். உங்களால்தான் எங்களது போராட்டத்தைப் பற்றி நேர்மையாக எழுத இயலும் என்று நினைக்கிறார். இலங்கைத் தமிழர் இனப் பிரச்னையைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்களேன்! இது எங்கள் தலைவரின் விருப்பம்.” என்றார் வெற்றிச்செல்வன் புன்சிரிப்பு மாறாமல்.

எனக்கு மீண்டும் தூக்கிவாரிப் போட்டது. “இலங்கைத் தமிழர் இனப்பிரச்னையைப் பற்றி மேலெழுந்த வாரியாகத்தான் தெரியும். தவிர நான் வெகு தொலைவில், தில்லியில் இருக்கிறேன். உங்கள் உணர்வுகளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியாத தொலைவு அது. தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு இலங்கைப் பிரச்னையைப் பற்றி எழுதுவது சாத்தியம். அங்கிருக்கும் எழுத்தாளர்களைப் பாருங்கள்”.

வெற்றிச்செல்வன் திடமாகத் தலையை அசைத்துச் சொன்னார்: “எங்கள் தலைவருக்கு நீங்கள் எழுதவேண்டும் என்றுதான் விருப்பம்”.

இது என்ன கிறுக்குத்தனம் என்று நினைத்தபடி சமையலறைக்குச் சென்று என் பணிப்பெண் பிரேமாவிடம் தேநீர் தயாரித்துக் கொண்டு வரும்படி சொன்னேன். வெற்றிச்செல்வன் விடுவதாக இல்லை. “தில்லியில் இருந்தால் என்ன, உங்களுக்கு என்ன விவரங்கள் வேண்டுமோ எல்லாவற்றையும் நாங்கள் தருவோம்.”

எனக்குச் சிரிப்பு வந்தது. “அப்படியெல்லாம் அத்தனை பெரிய விஷயத்தைப் பற்றி எழுத முடியாது. பஞ்சாபுக்குச் செல்லாமல் என்னால் மௌனப் புயலை எழுதியிருக்க முடியாது. இலங்கைக்கு, முக்கியமாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் எப்படி உங்கள் பிரச்னையைப் பற்றி எழுத முடியும்? இன்றையச் சூழலில் (1985) இலங்கைக்கு ஒரு எழுத்தாளர் / பத்திரிகையாளர் என்ற முறையில் எனக்கு விசா கிடைக்காது.”

“ஓ! எதுவும் தேவை இல்லே! தலைமன்னாரிலிருந்து கள்ளத் தோணியிலே வழுக்கிடலாம்!”

கண்கள் இடுங்க, கன்னங்கள் உப்பிப் பளபளக்க வெற்றிச்செல்வன் சிரித்தார். பிரேமா கொண்டுவந்த தேநீரையும் சிற்றுண்டியையும் வெற்றிச்செல்வன் ஆர்வத்துடன் ருசித்தார். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆளாகத் தெரிந்தார். அவரது வேண்டுகோளை ஏற்காமல் போனாலும் அவரிடம் சும்மா பேச்சுக் கொடுக்கலாம் என்ற ஆர்வத்துடன் அவரைப்பற்றி, அவரது இயக்கத்தைப் பற்றி விசாரித்தேன். அவரது பேச்சிலிருந்து அவர் வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. தமிழர் பிரச்னையை சுருக்கமாகச் சொல்லி, சிங்கள அரசுக்கு எதிராக பல தமிழர் இயக்கங்கள் செயல்படுவதாகச் சொன்னார்.

“ஏழையோ, பணக்காரனோ என் தலைமுறையைச் சேர்ந்த பொடியன்கள் யாரானாலும் ஏதாவது ஒரு போராளி இயக்கத்தில் சேராமல் இருக்க இயலாது.”

“எல்லாரும் ஆயுதம் ஏந்திய போராளிகளா?” என்றேன் அப்பாவித்தனமாக.

“ஆயுதம் ஏந்தாமல் இருக்க இயலாது. சும்மா கதைச்சா கேட்க ஆளில்லே!”

வெற்றிச்செல்வன் ஒரு புகைப்பட ஆல்பத்தைக் காண்பித்தார். லிபியாவில் கடாஃபியின் ஆட்களின் கீழ் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் அவரும் அவரது சகாக்களும் பயிற்சி பெற்ற காலத்தில் எடுத்த புகைப்படங்கள். எல்லா இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பயிற்சி பெற்று வருவது ஓர் இயல்பான விஷயமாக விவரித்தார்.

நான் விளையாட்டாக நினைத்துக் கேட்டேன். “சுமார் எத்தனை பேரை நீங்கள் கொன்றிருப்பீர்கள்?”

“இருநூறுக்குக் குறையாது.”

நான் திடுக்கிட்டேன். இவரா? குழந்தைச் சிரிப்பும் பளபளக்கும் ரோஜாக் கன்னங்களும் கொண்ட இவரால் கொலை செய்ய முடிந்திருக்குமா? கொழும்பில் 1983இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகளைப்பற்றின விவரங்கள் அடங்கிய அச்சிட்ட தாள்களை என்னிடம் கொடுத்து, “வாசிச்சுப் பாருங்கள். நான் பிறகு வரன்” என்று வெற்றிச்செல்வன் கிளம்பியபோது, நான் இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. பிரேமாவிடம் அவரைப் பற்றின விவரங்களைச் சொன்னேன். அவளுடைய கண்கள் பீதியில் விரிந்தன. “ஆப் ஏக் ஆதக்ங்வாதிகோ சாய் பிலாரஹே ஹைன்?” (ஒரு பயங்கரவாதிக்கா தேநீர் உபசரிக்கிறீர்கள்?) என்று அதிசயித்தாள்.

வெற்றிச்செல்வனைப் போல் வேறு இலங்கைத் தமிழர்கள், பல இயக்கங்களைச் சேர்ந்த ‘பயங்கரவாதிகள்’ என்னுடன் ‘கதைக்க’ வருவது பிறகு ஒரு கால கட்டத்தில் வழக்கமாகிப் போனதும், நான் சொல்வதற்கு முன் பிரேமா அவர்களுக்குத் தேநீர் தயாரிக்கத் துவங்கினாள். இலங்கைத் தமிழராகவே நான் என்னை பாவித்துக் கொண்டு, கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்த காலம் அது. ஆனால் அந்த நிலை வெகு நாள் தயக்கத்திற்குப் பின்தான் வந்தது.

வெற்றிச்செல்வன் என்னை சந்தித்த ஆண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு ஃபிஜி தீவுகளுக்கு சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டேன். ஆஸ்திரேலிய நகரம் ஸிட்னி வழியாகவே ஃபிஜி செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் செய்தி சேவைத்துறையின் அழைப்பும் கிடைத்ததால் ஃபிஜியிலிருந்து திரும்பும் வழியில் ஸிட்னியில் எட்டு நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஸிட்னி வந்திருக்கும் செய்தி அறிந்து ஒரு மாலை என்னைச் சந்திக்க இரு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வந்தார்கள். கொழும்பில் நடந்த இனக்கலவரத்துக்குப் பிறகு, அங்கு இருப்பது ஆபத்து என்று பாதுகாப்பிற்காக பெற்றோர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகச் சொன்னார்கள். தங்களுடைய நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் மறு நாள் சனிக்கிழமை மாலை எனக்கு வேறு அலுவல் இல்லாவிட்டால் அழைத்துச் செல்கிறோம் என்றும் சொன்னார்கள். நான் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

அன்று காலைதான் எனக்கு ஒரு சங்கடமான அனுபவம் ஏற்பட்டிருந்தது. நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்றிருந்தேன். கடையில், தொலைந்துபோன பார்வையுடன் நடந்து வந்த ஒரு சேலை கட்டிய பெண்மணியைப் பார்த்தேன். தமிழ்ப் பெண்ணாகத் தோன்றிற்று. நெருங்கி “தமிழா ?” என்றேன். அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் “ஓம், ஸ்ரீலங்கா” என்றார். என்னை இந்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, “எத்தனை நாட்களாக ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் வழிந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஒரு வருஷமாச்சு. சொந்த மண்ணைவிட்டு இத்தனை தூர தேசம் வந்து தவிக்கிறன். இங்கே பாதுகாப்புன்னாலும் சொந்த ஊர் சொந்த வீடு போல வருமா? எப்ப திருப்பிப் போக இயலுமோ?” என்று எனக்குப் பரிச்சயமற்ற யாழ்ப்பாணத் தமிழில் அரற்றினார். முன்பின் தெரியாத என்னிடம் தமிழ்ப் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் உடைந்து, வெள்ளைக்காரர்கள் நடத்தும் கடை மையத்தில் நின்று புலம்பிக் கண்ணீர் விட்டது மிக ஆழமாக என்னை அன்று முழுவதும் சலனப்படுத்திற்று.

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த இளைஞர்கள் வந்து என்னைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது இளைஞர்களும் யுவதிகளும் இருந்தார்கள். அனைவருமே இருபத்தைந்து வயதுக்குள்தான் இருப்பார்கள். அந்த வயதுக்குரிய உல்லாசமோ, சிரிப்போ அவர்களிடையே இல்லாததை நான் கவனித்தேன். நாட்டுச் சூழலே தங்களைப் புகலிடம் தேடி வேறு நாட்டுக்குத் துரத்தியதாகவும் சொந்த மண்ணை விட்டு வந்திருப்பது தங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களை ஒரு குற்ற உணர்வும் வாட்டுவதாகத் தோன்றிற்று. 1983 தமிழ் இனப் படுகொலைகளைப் பற்றின செய்திக் குறிப்புகளும் புகைப்படங்களும் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு, பிரச்சார வினியோகத்துக்கு ஏற்ற வகையில், அவர்களிடம் கத்தை கத்தையாக இருந்தன. அவர்களில் சிலர் என்னுடைய மௌனப்புயலைப் படித்திருந்தார்கள். நாங்கள் பட்ட, படும் துயரத்தைப் பற்றி நீங்கள் எழுதவேண்டும் என்றார்கள். அவர்கள் காட்டிய புகைப்படங்கள் மிக பயங்கரமாக அடிவயிற்றைக் கெல்லும் காட்சிகளைக் கொண்டவையாக இருந்தன.

மற்ற தமிழ்ப் போராளி இயக்கங்களைவிட விடுதலைப் புலிகளின் இயக்கம் அப்போது துரித வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. இந்த இளைஞர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் போலப் பேசினார்கள். அவர்களது நிலையைக் கண்டு எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால் அவர்களது பிரச்னையைப் பற்றி எழுத வேறு வகையான தாக்கமும் அனுபவமும் புரிதலும் தேவை. எனக்கு அத்தகைய அனுபவம் அங்கு கிட்டவில்லை. ஆனால் அவர்களது பிரச்னையிலிருந்து நான் விலகி நிற்கப் பார்த்தாலும் அது என்னை விடாமல் துரத்தி வரும் என்று நான் அப்போது அறியவில்லை.

இந்தியா திரும்பியதும் ஒரு நாவல் எழுத, கரு லட்டு போல என் கையில் இருந்தது. அது நான் ஃபிஜியில் சந்தித்த, சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அசாதாரணக் கதை. நிஜக் கதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்