நான் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்களை இங்கே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன். இவற்றை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அல்லது பாதி படித்துவிட்டு வைத்திருக்கிறேன். (சில சமயம் நல்ல புத்தகம் என்று தெரிந்தும் முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்பதுண்டு.)
- ஜெயமோகனின் கொற்றவை – ஆரம்பம் அற்புதமாக இருந்தது. முழு ஈர்ப்போடு படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன்.
- ஜோ டி க்ரூஸின் ஆழி சூழ் உலகு – இதுவும் பாதி படித்து வைத்திருக்கும் புத்தகம்தான்.
- ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றும் கடலுக்கு அப்பால் – இவை இரண்டையும் ஏனோ ஒரே புத்தகமாகத்தான் கருதத் தோன்றுகிறது.
- சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
- பாலகுமாரனின் உடையார்
- நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்
- நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் – இது இயக்குனர் சேரன், மற்றும் ரதி நடித்து சொல்ல மறந்த கதை என்ற திரைப்படமாக வந்தது.
- அரு. ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி
- வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்
- பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை
போனஸ்:
- பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள்
- கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள்
- கிருத்திகாவின் வாசவேஸ்வரம்
- தேவனின் சி.ஐ.டி. சந்துரு
- அ.கா. பெருமாளின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி
இதைப் படிப்பவர்களும் தாங்கள் படிக்க விரும்பும் தமிழ் புத்தகங்களை சொல்லுங்களேன்!