பிரத்யேக

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

சில பல வருஷங்களாகவே அதிகமாக இருந்த மனச்சோர்வு ஒரு வழியாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது.. மூக்கின் அருகில் இருந்த நீர் இப்போது கழுத்து மட்டத்துக்குப் போயிருக்கிறது. ஒரு காலத்தில் நூலகங்களில் தவம் கிடந்தவன்தான்; ஆனால் வீட்டிலிருந்து ஒரு மைல் கூட இருக்காத நூலகத்துக்கு இரண்டு மூன்று மாதம் முன்னால்தான் போனேன் – ஐந்து வருஷம் கழித்து!  படிப்பதே குறைந்துவிட்டது. சின்ன எழுத்துக்களைப் படிக்க முடியாதது ஒரு மனத்தடையாக இருக்கிறது. பார்ப்போம், இந்த வருஷமாவது கொஞ்சம் படிக்க முடிகிறதா என்று!



நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!

சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.

ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!

ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.

எங்கள் பிற தளங்கள்:

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

அகதா கிறிஸ்டி: Death Comes as the End

agatha_christieஆர்தர் கானன் டாயிலுக்கு அடுத்தபடி என்றால் அகதா கிறிஸ்டிதான். பெரும் புகழும் வெற்றியும் பெற்ற எழுத்தாளர். ஹெர்க்யூல் பொய்ரோ, மிஸ் மார்பிள் என்ற இரண்டு புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர்களை உருவாக்கியவர்.

ஒரு சட்டகத்தை அடிக்கடி பயன்படுத்துவார். ஒரு கொலை நடக்கும். ஏழெட்டு பேரில் யாரோ ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும். கொலை செய்தது இவனா அவளா என்று யோசிக்கும்போது அடுத்த கொலை விழும். கதைப் பின்னல் (well plotted mysteries), வாசகர்களை மீண்டும் மீண்டும் தவறாக யூகிக்க வைத்தல் (red herrings) எல்லாம் இந்த சட்டகத்தில் சிறப்பாக வெளிப்படும். அழுத்தமான, நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் பற்றி எல்லாம் அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

போய்ரோ, மிஸ் மார்பிள் இல்லாமலும் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றில் சில சிறந்த துப்பறியும் கதைகளும் கூட. இந்தப் பதிவு அப்படிப்பட்ட ஒரு நாவல் பற்றித்தான்.

Death Comes as the End (1945) புத்தகம்தான் நான் படித்த முதல் கிறிஸ்டி. படிக்கும்போது 15 வயதிருக்கலாம். முதல் புத்தகத்திலேயே மனதைக் கவர்ந்துவிட்டார்.

கதை நடப்பது பழங்கால எகிப்தில். அப்பா, அவருடைய புது துணைவி அதாவது வைப்பாட்டி, மூன்று வயது வந்த மகன்கள், இருவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றன. விதவை மகள். வயதான பாட்டி. புது துணைவி வந்ததும் வீட்டில் சச்சரவுகள். துணவி இறக்கிறாள். அது கொலை மாதிரி இருந்தாலும் விபத்து என்று பூசி மழுப்பிவிடுகிறார்கள்.

அதன் பிறகு வரிசையாக மரணங்கள். மூத்த மகன் மட்டும்தான் விஷம் கொடுக்கப்பட்டும் பிழைத்திருக்கிறான். யார் குற்றவாளி என்ற சந்தேகத்தை அருமையாக மாற்றிக் கொண்டே இருப்பார். மறுவாசிப்பில் தட்டையான பாத்திரங்கள், அங்கங்கே இழுப்பது எல்லாம் தெரிந்தது. ஆனால் பதின்ம வயதில் படித்தபோது புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

கிறிஸ்டியின் பலங்கள் – குறிப்பாக red herring உத்தி – மிகச் சிறப்பாக வெளிப்படும் நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். துப்பறியும் நாவல் விரும்பிகள் தவறவிடக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள்


சுரேஷ்குமார இந்திரஜித் நான் அவ்வளவாகப் படிக்காத எழுத்தாளர். இணையத்தில் அங்கும் இங்கும் கிடைத்த சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஜெயமோகன், எஸ்ரா முறையே பரிந்துரைத்த விரித்த கூந்தல், மறைந்து திரியும் கிழவன் போன்ற சிறுகதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. அதனால் புத்தகங்களையும் வாங்கவில்லை, இணையத்தில் கிடைத்த பிற சிறுகதைகளையும் படிக்காமல் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இந்திரஜித் இரண்டு வகையான சிறுகதைகளை எழுதுகிறார் என்று தோன்றுகிறது. ஒன்று எனக்குப் புரியக் கூடிய, நெகிழ்வான, உறவுகளின், பந்தங்களின் சிறுகதைகள். இரண்டாவதாக ஜெயமோகன், எஸ்ரா போன்ற வேற லெவல் வாசகர்களுக்கான மாஜிகல் ரியலிசம் கலந்த சிறுகதைகள். முதல் வகை சிறுகதைகள் இரண்டு – பெரியம்மை, செம்பொன் சிலை – அழகானவை.

பெரியம்மை நெகிழ்வான கதை. அண்ணன் தம்பி உறவை அழகாக விவரிக்கிறது. அதுவும் பெரியப்பா பாட்டு பாடுவது, கதை பெரியப்பாவை சுற்றிச் சுழன்றாலும் தலைப்பு பெரியம்மை என்று இருப்பது எல்லாம் நல்ல டச்! படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

செம்பொன் சிலை இன்னொரு நெகிழ்வான கதை. வேலை இல்லாத இளைஞன், பக்கத்து வீட்டுப் பெண், அப்பாவின் இன்னொரு மனைவி, அமிர்தாஞ்சனம் தடவிக் கொள்ளும் அம்மா என்று அருமையான பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

அங்கயற்கண்ணி சிறுகதையை அவரது தமிழுக்காகவே படிக்க வேண்டும். தமிழுக்காகத்தான் படிக்க வேண்டும், வேறு ஒன்றுமில்லை. ஆனால் அருமையான தமிழ்.

மறைந்து திரியும் கிழவன் போன்ற கதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. பொதுவாக இது போன்ற மாஜிகல் ரியலிசம் கதைகள் நான் ரசிப்பது அபூர்வமே. சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், விரித்த கூந்தல் சிறுகதைகளும் எனக்கு சுமார்தான்.

ஜெயமோகன் விரித்த கூந்தல், பிம்பங்கள் சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். எஸ்ரா மறைந்து திரியும் கிழவன் சிறுகதையை தன் 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

அடுத்த முறை ஊருக்குப் போகும்போது இவரது சிறுகதைத் தொகுப்பு எதையாவது வாங்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

அஜிதனின் சில சிறுகதைகள்

அஜிதனை அனேகமாக ஜெயமோகனின் மகன் என்றுதான் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவ்ர் தன்னளவில் ஒரு சுவாரசியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அடர்த்தியான, நுண்விவரங்கள் நிறைந்த எழுத்து பாணி. சில சமயம் இத்தனை விவரம் தேவையா என்று தோன்ற வைத்துவிடுகிறார்.

ஆனால் படுசுமாராக எழுதும் எனக்கே என் கதைகள் பெரிய வெளியாக, பெரிய காட்சித் தொகையாக இருக்கின்றன. என் திறமை குறைவாக இருப்பதால் எதை சொல்ல வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பது சரியாகக் கை வரவில்லை. மனதில் தெரிவதில் நான் பத்து சதவிகிதத்தை எழுதினால் அதிகம், அதுவும் அனேகமாக உரையாடல் மூலம்தான் சொல்ல முடிகிறது. அஜிதனால் மனதில் தெரிவதை பெருமளவு எழுதி விட முடிகிறது என்று நினைக்கிறேன்.

போர்க் ரோஸ்ட் சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். பன்றிக்கறி சமைப்பதை விலாவாரியாக விவரிக்கிறார். இத்தனை விவரங்கள் இருப்பதால், அவை தன்னளவில் முழுமையாக இருப்பதால் கதையை இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டியின் தீனி ஆசை என்றே கூட படித்துவிடலாம். ஆனால் லேய் உந்தாத்தா இருக்காம்லா என்ற அரை வரிதான் கதை. குறைந்த பட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படிப் படித்தால் கதை வேறு ஒரு தளத்துக்குப் போகிறது. பெரிய லட்டில் புதைந்திருக்கும் ஒரு முந்திரியை தவற விடுவது போல இந்த வரியை தவற விடலாம். அதனால்தான் கொஞ்சம் அடர்த்தி குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

1134 கப்பல்கள் சிறந்த சிறுகதை. சிறுவனின் வளர்ச்சி என்று சுருக்கிவிடலாம். ஆனால் நுண்விவரங்கள், விவரிப்புகள், கப்பலோட்டிய சிறுவன், ஆசிரியையை வெட்டுவேன் என்று கிளம்பும் அப்பா, நாய் குட்டன், இட்லிப்பூவிலிருந்து தேன் குடிப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக தங்கை பாப்பு – கலக்கிவிட்டார். வாழ்க! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நங்கேலி என் கண்ணில் எளிமையான கதை. ஆனால் ஒரு தொன்மத்தின் கவர்ச்சி இருக்கிறது. ராதிகாவின் வேர்கள் என்னவாக இருக்கும் என்று அஜிதன் கோடி காட்டி இருப்பதுதான் எனக்கு இதை சிறுகதை ஆக்குகிறது.

மூன்று குறுங்கதைகளில் இரண்டாவது எட்கர் ஆலன் போவை நினைவுபடுத்தியது.

நிலைவிழி சிறுகதையில் இறக்கப் போகும் பெண்ணின் மன ஓட்டங்களை நன்றாக சித்தரிக்கிறார். ஆனால் கதையின்  முத்தாய்ப்பு எனக்கு கதையோடு ஒட்டாத மாதிரி இருந்தது.

அஜிதனை நான் பார்த்ததில்லை. என்றாவது சந்திக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

தி. ஜானகிராமன் சிறுகதைகள்

தி.ஜா. சிறுகதைகளின் மாஸ்டர். அவரது சிறுகதைகள் எனக்கு செகாவைத்தான் நினைவுபடுத்துகின்றன. இத்தனைக்கும் செகாவின் சிறந்த சிறுகதைகள் வெறுமே கோடு போட்டுத்தான் காட்டுகின்றன, பலவற்றை நாம்தான் நிரப்பிக் கொள்ள வேண்டும். தி.ஜா. விவரித்துவிடுவார். என்னதான் ஒற்றுமை என்று யோசித்துப் பார்த்தால் இருவர் எழுத்தும் மிகச் சுலபமாக, முயற்சியே செய்யாமல், கதாசிரியனின் எந்த வித தலையீடும் இல்லாமல் மனிதர்களைக் காட்டிவிடுவதுதான். தலையீடு என்பது சரியான வார்த்தை இல்லை, அதனால் இப்படி சொல்கிறேன். புதுமைப்பித்தனின் நான் உனக்கு காட்டுகிறேன் என்ற தொனி இல்லை. ஜெயமோகனின் உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. அசோகமித்திரனின் பார் நான் இல்லவே இல்லை என்ற முனைப்பும் இல்லை.

அவரது கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எப்போதோ எழுதி இருந்தேன். இந்த முறை கண்ணில் அவ்வப்போது பட்ட அவரது சிறுகதைகள் பற்றி:

வேதாந்தியும் உப்பிலியும் சிறுகதையில் பிய்த்து உதறுகிறார். மனிதர்களின் களங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்.

அவலும் உமியும்: பாயசம் மற்றும் கடன் தீர்ந்தது சிறுகதைகளை நினைவுபடுத்தியது. வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்துக் குழந்தை புஷ்டியாக இருப்பதைக் கண்டு வீட்டு சொந்தக்காரர் காயாப்பிள்ளைக்கு கொஞ்சம் எரிகிறது – இல்லை இல்லை அசிகை.

முள்முடி போன்ற சிறுகதைகள் எங்கே போகும் என்று முதல் பாராவை படிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது தொழில் திறமை வெளிப்படுகிறது.

திண்ணை வீரர் அவரது ஆரம்ப கால சிறுகதையாக இருக்க வேண்டும். ‘எழுந்து வந்தேன்னா’ என்பது சின்ன முடிச்சாக இருக்கிறது, சிறு புன்னகைதான் வருகிறது.

பூட்டுக்கள் சிறுகதையிலும் சின்ன முடிச்சுதான், சிறு புன்னகைதான் வருகிறது.

கங்காஸ்னானம் கடன் தீர்ந்தது சிறுகதையை நினைவுபடுத்தியது. படிக்கலாம்.

thi_janakiramanகமலம்: கதை செயற்கையாக இருக்கிறது. வீட்டு சமையல்காரனை மகனாகப் பாவிக்கும் எஜமானியம்மா சும்மா டமாஸுக்கு அவனை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறாளாம்.

தோடு: ஏழைப்பெண் பட்டுவின் ஆசைப்படியே அவள் பணக்கார, அழகான முத்துராமுவை மணக்கிறாள். ஆனால் குடும்பத்தின் குறைகள் மெதுமெதுவாக அவளுக்குத் தெரிய வருகின்றன.

மேரியின் ஆட்டுக்குட்டியை குறிப்பிட ஒரே காரணம்தான். உறவு கொண்ட பெண் கர்ப்பம் என்று தெரிந்ததும் பொய்ச் சத்தியம் செய்ய பெண்ணின் விரல்களைப் பிடித்துக் கொள்கிறான். அந்த விரல்களின் விவரிப்புதான்.

பஞ்சத்து ஆண்டி நல்ல விவரிப்பு, ஆனால் இது போன்ற பஞ்சங்களை நான் கேள்விப்பட்டதோடு சரி. அதனால்தானோ என்னவோ என் மனதைத் தொடவில்லை. பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதையும் (வண்ணநிலவன்) இதே போலத்தான் என் மனதைத் தொடவில்லை.

விசைவாத்தின் முத்தாய்ப்பு சின்ன புன்முறுவலை வரவழைக்கிறது, ஆனால் பெரிதாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை அல்ல.

பெட்டி வண்டி போன்றவை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை அல்ல.

அடுத்த வீடு 50 மைல்: தி.ஜா.வின் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள். அவர் சென்ற காலத்தில் அதிசயமாக இருந்த barbecue, ஹோட்டல் அறைகளில் தானே காஃபி போட்டுக் கொள்ளும் வசதி என்பதெல்லாம் இப்போது நமக்குப் பழகிவிட்டன.

தன் சொந்த ஊரான கீழ்விடவியல் (1969) பற்றி அவர் எழுதிய கட்டுரையில் தலித்கள் – அவர் ஹரிஜன் என்றுதான் குறிப்பிடுகிறார் – நிலை மாறிவிட்டது என்று எழுதி இருந்தார், இன்று நிலவரம் அன்றை விட மோசமாக இருக்குமோ என்று தோன்றுகிறது, தமிழகத்தில் ஜாதி உணர்வு அதிகமாகிக் கொண்டே போவது போல உணர்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

————————-

பிடித்த சிறுகதை: Shoes

எட்கர் கெரட் இஸ்ரேலி எழுத்தாளர். பல சிறுகதைகள், காமிக்ஸ் புத்தகங்களை எழுதி இருக்கிறாராம். தற்செயலாகத்தான் இந்தச் சிறுகதையைப் படித்தேன். மிக அருமையாக எழுதி இருக்கிறார். ஜெர்மானியர்களை வெறுக்கும், ஜெர்மனியை பகிஷ்கரிக்கச் சொல்லும் தாத்தாவிடம் தவறு கண்டுபிடிக்க முடியுமா? ஏற்கனவே தாத்தாவை இனப் படுகொலையில் இழந்த சிறுவன் தாத்தா சொன்னதைக் கேட்டு தானும் ஜெர்மானியப் பொருள்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு கண்டுபிடிக்க முடியுமா? அவன் மனம் மாறுவதில்? சிறுவனின் மனநிலையை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். சிறிய சிறுகதை, இணத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


Shoes

Edgar Keret

Touching my Adidas stripes, I thought of my grandfather.

On Holocaust Commemoration day, our teacher, Sarah, took us on the No 57 bus to the Vohlin Memorial Museum and I felt really important. All the kids in my class had families that came from Iraq, except me and my cousin and one other kid, Druckman; and I was the only one whose grandfather died in the Holocaust. The Vohlin Memorial Museum was a really fancy building, all covered in expensive-looking black marble. It had a lot of sad pictures in black and white and lists of people and countries and victims. We paired up and walked along the wall, from one picture to the next, and the teacher said not to touch, but I did. I touched one of them, a cardboard photograph of a pale and skinny man who was crying and holding a sandwich. The tears running down his cheeks were like the stripes on an asphalt street, and Orit Salem, the girl I was paired up with, said she’d tell the teacher on me. I said that as far as I was concerned, she could tell everyone, even the principal, I didn’t care. That was my grandfather, and I could touch whatever I wanted.

After the pictures, they took us into a big hall and showed us a movie about little kids being loaded onto a truck. They all choked on gas in the end. After that this skinny old guy came up on the stage and told us how the Nazis were scum and murderers and how he got back at them and even strangled a soldier to death with his bare hands.

Djerbi, who was sitting next to me, said the old man was lying and, from the looks of him, there wasn’t a soldier in the world he could beat up. But I looked into the old man’s eyes and I believed him. There was so much anger in them that all the attacks from all the hotshot punks in the world seemed like small change by comparison.

In the end, after he was finished telling us about what he’d done in the Holocaust, the old man said that everything we’d heard was important, not just for the past but for what was happening now, too. Because the Germans were still living and they still had a country. The old man said he’d never forgive them and he hoped we wouldn’t either, and that we should never ever visit their country, God forbid. Because when he and his parents had arrived in Germany fifty years ago everything looked really nice and it ended in hell. People have a short memory sometimes, he said, especially for bad things. They prefer to forget. But don’t you forget. Every time you see a German, remember what I told you. And every time you see anything that was made in Germany, even if it’s a TV, because most of the companies that make TVs, or anything else, are in Germany, always remember that the picture tube and other parts underneath the pretty wrapping were made out of the bones and skin and flesh of dead Jews.

On our way out, Djerbi said again that if that old man had strangled so much as a cucumber, he’d eat his T-shirt. And I thought it was lucky our fridge was made in Israel, ‘cos who needs trouble.

Two weeks later, my parents came back from abroad and brought me a pair of trainers. My older brother had told my mother that’s what I wanted, and she bought the best ones. Mum smiled when she handed them to me. She was sure I didn’t know what was in the bag. But I could tell right away by the Adidas logo. I took the shoebox out of the bag and said thank you. The box was rectangular, like a coffin. And inside it lay two white shoes with three blue stripes on them, and on the side it said Adidas Rom. I didn’t have to open the box to know that. “Let’s try them on,” Mum said, pulling the paper out. “To see if they fit.” She was smiling the whole time, she didn’t realise what was happening.

“They’re from Germany, you know,” I told her and squeezed her hand hard.

“Of course I know,” Mum smiled. “Adidas is the best make in the world.”

“Grandpa was from Germany too,” I tried hinting.

“Grandpa was from Poland,” Mum corrected me. She grew sad for a moment, but it passed right away, and she put one of the shoes on my foot and started lacing it up. I didn’t say anything. I knew by then it was no use. Mum was clueless. She had never been to the Vohlin Memorial Museum. Nobody had ever explained it to her. And for her, shoes were just shoes and Germany was really Poland. So I let her put them on my feet and I didn’t say anything. There was no point telling her. It would just make her sadder.

After I said thank you one more time and gave her a kiss on the cheek, I said I was going out to play. “Watch it, eh?” Dad kidded from his armchair in the living room. “Don’t you go wearing down the soles in a single afternoon.” I took another look at the pale shoes on my feet, and thought back about all the things the old man who’d strangled a soldier said we should remember. I touched the Adidas stripes again, and remembered my grandpa in the cardboard photograph. “Are the shoes comfortable?” Mum asked. “Of course they’re comfortable,” my brother answered instead of me. “Those shoes aren’t just some cheap local brand, they’re the very same shoe that Cruyff used to wear.” I tiptoed slowly towards the door, trying to put as little weight on them as possible. I kept walking that way towards Independence Park. Outside, the kids from Borochov Elementary were forming three groups: Holland, Argentina and Brazil. The Holland group was one player short so they agreed to let me join, even though they usually never took anyone who didn’t go to Borochov.

When the game started, I still remembered to be careful not to kick with the tip, so I wouldn’t hurt Grandpa, but as it continued, I forgot, just like the old man at the Vohlin Memorial Museum said people do, and I even scored the tiebreaker with a volley. After the game was over, I remembered and looked down at them. They were so comfortable all of a sudden, and springier too, much more than they’d seemed when they were still in the box. “What a volley that was, eh?” I reminded Grandpa on our way home. “The goalie didn’t know what hit him.” Grandpa didn’t say a thing, but from the lilt in my step I could tell he was happy too.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: எட்கர் கெரட் விக்கி குறிப்பு

பிபூதிபூஷன் பற்றி சிறுகதை

ஜெயமோகன் உண்மை ஆளுமைகளின் வாழ்க்கையை கருவாக வைத்து எழுதும் சிறுகதைகள் பல சமயம் மிகச் சிறப்பாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக அறம் சிறுகதைகள்.

அந்த வரிசையில் இன்னுமொரு சிறுகதை இச்சாமதி. இந்த முறை பிபூதிபூஷன் பந்தோபாத்யாய். கதை பெரிதாக சுவாரசியப்படவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன், கடைசி இரண்டு மூன்று பாராவில் அட அப்படியா என்று தோன்ற வைத்தார், பிபூதிபூஷனின் வாழ்வைப் பற்றி விக்கிபீடியாவில் தேட வைத்துவிட்டார். அறம் சிறுகதைகளை விட என் கண்ணில் ஓரிரு மாற்று குறைவுதான், இருந்தாலும் நல்ல சிறுகதை.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இச்சாமதி சிறுகதை

ஒபாமாவின் 2023 புத்தகப் பரிந்துரைகள்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒவ்வொரு ஆண்டும் தான் அந்த ஆண்டில் படித்த சிறந்த புத்தகங்கள், பார்த்த சிறந்த திரைப்படங்கள், கேட்ட சிறந்த இசை என்று ஒரு பட்டியலை வெளியிடுவார். 2023-க்காக அவர் வெளியிட்ட பட்டியலில் நான் ஒரு புத்தகத்தைக் கூடப் படித்ததில்லை. புத்தகத்தை விடுங்கள், ஒரு எழுத்தாளர் பேரைக் கூடக் கேட்டதில்லை. அதனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

இன்றுதான் தோன்றியது, என் பதிவுகளைப் படிக்கும் லட்சக்கணக்கானவர்களில் – சரி வேண்டாம் ஆயிரக்கணக்காவர்களில் – சரி உண்மையை ஒத்துக் கொள்வோமே பத்துக் கணக்கானவர்களில் யாராவது எதையாவது படித்திருக்க மாட்டீர்களா? படித்திருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

புத்தகப் பட்டியல்:

  1. James McBride – Heaven and Earth Grocery Store
  2. Benjamin Labatut – MANIAC
  3. Matthew Desmond – Poverty, By America
  4. Safia Sinclair – How to Say Babylon
  5. David Grann – Wager
  6. Chris Miller – Chip War
  7. Lauren Groff – Vaster Wilds
  8. Sarah Bakewell King – Humanly Possible
  9. Jonthan Eig – King: A Life
  10. Abraham Verghese – Covenant of Water
  11. Jonathan Rosen – The Best Minds
  12. S.A. Cosby – All the Sinners Bleed
  13. Tim Alberta – The Kingdom, the Power and the Glory
  14. Patricia Evangelista – Some People Need Killing
  15. Paul Harding – This Other Eden

திரைப்படங்கள், இசை உள்ளிட்ட முழுப் பட்டியலும் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

 

தடை செய்யப்பட்ட சிங்கள சிறுகதை

மொழிபெயர்ப்பு ஜெயமோகன் தளத்தில் வெளியாகி நாலைந்து வருஷம் ஆகிவிட்டது, இப்போதுதான் என் கண்ணில் பட்டது.

ஷக்திக சத்குமார என்பவர் எழுதி இருக்கிறார். ரிஷான் ஷெரீஃப் மொழிபெயர்த்திருக்கிறார்.

சர்ச்சைகளை எழுப்ப வாய்ப்பிருக்கும் சிறுகதைதான்; புத்த பிக்குகளின் பாலியல் அத்துமீறல்கள், புத்தர் துறவு மேற்கொண்டதற்கு காரணம் அவரால் தன் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை என்று புனைவிற்குள் புனைவாக ஓரிரு வரிகள் என்றெல்லாம் வருகிறது. சிறுகதையாக நான் இதை உயர்வாக மதிப்பிடவில்லை.

அதனால் ஒரு குறையுமில்லை. புனைவுகளை தடை செய்வது பெரும் தவறு என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். கோட்சேயை நாயகனாகவும் காந்தியை வில்லனாகவும் வைத்து நாளை ஒரு புனைவு எழுதப்பட்டால் எனக்கு கடுப்பேறும்தான், ஆனால் அது என் பிரச்சினை. ஒரு நாளும் அப்படிப்பட்ட புனைவு தடை செய்யப்பட வேண்டும் என்று குரல் எழுப்ப மாட்டேன்.

சத்குமார இதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்போது விடுதலை ஆகிவிட்டார்.

ஏதோ என்னால் முடிந்தது, மொழிபெயர்ப்புக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்த்த ரிஷான் ஷெரிஃபுக்கு என் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஆர்.எம். வீரப்பன் மறைவு

ஆர்.எம். வீரப்பன் நிறைவாழ்வு வாழ்ந்து 98 வயதில் மறைந்தார்.

வீரப்பன் எம்ஜிஆர் விசுவாசி என்பது தெரிந்ததே. எம்ஜிஆரை வைத்து பல திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அனேகமாக எல்லாமே வெற்றிப் படங்கள். எம்ஜிஆர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகும் நிறைய வெற்றிப் படங்களை எடுத்தவர். அறநிலையத் துறை அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தார். எம்ஜிஆரின் உடல்நிலை மோசமானபோது கட்சி அவர் கைக்குள்தான் இருந்தது. ஆனால் மக்கள் செல்வாக்கில்லாதவர், ஜானகியை முன்னால் வைத்து தான் கிங்மேக்கராக இருக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. ஜெயலலிதா மீது எப்போதுமே கொஞ்சம் காழ்ப்பு இருந்திருக்கிறது. இருந்தாலும் ஜெ மந்திரி சபையிலும் கொஞ்ச நாள் இருந்தார். அதற்குப் பிறகு அரசியல் அஸ்தமனம்தான்.

சிலிகன்ஷெல்ஃபில் புத்தகங்கள்தான். வீரப்பன் எம்ஜிஆர் யார் என்று ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் எம்ஜிஆரை விட ஜெயலலிதா பற்றிதான் அதிகம் எழுதி இருக்கிறார். ஜெ மீது எப்போதும் எம்ஜிஆருக்கு ஒரு soft corner இருந்திருக்கிறது. ஜெ தான் எம்ஜிஆரின் ‘துணைவி’, தன்னால் எம்ஜிஆரை அடக்கி ஆள முடியும் என்று காட்ட அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் முயன்றாராம். ஆர்எம்வீயின் தலையீட்டால்தான் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடிக்க முடியாமல் போயிற்றாம். ஆர்எம்வீ ஜெவை நீங்கள் அழைத்துச் சென்றால் உங்கள் கீப்பை அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போகிறீர்கள் என்றுதான் பேச்சு வரும் என்ற் வெளிப்படையாகவே எம்ஜிஆரிடம் சொன்னாராம். அப்போது ஆரம்பித்த உரசல் அரசியலிலும் நீடித்திருக்கிறது.

உண்மையில் சந்திரகலாவுக்கு பதில் ஜெ உலகம் சுற்றும் வாலிபனில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஆர்எம்வீ தன் நினைவுகளை உண்மையாக எழுதி இருந்தால் அவை முக்கியமான ஆவணமாக இருந்திருக்கும். இப்போதைக்கு இந்த ஒரு புத்தகம் அறுபதுகளில் இறுதியில், எழுபதுகளில் ஆரம்பத்தில் ஜெ-எம்ஜிஆர் உறவைப் பற்றி ஊர் உலகத்தில் என்ன நினைத்தார்கள் என்பதைக் கொஞ்சம் தெளிவாக்குகிறது. படிக்கலாம், ஆனால் இதெல்லாம் தமிழர்களுக்கு மட்டும்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ஒரு பழைய கிண்டல் பதிவு

சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்

சந்திரபாபு வசீகரமான ஆளுமை. ஆனால் ஒரு நடிகராக அவர் என்னை பெரிதாக கவர்ந்ததில்லை. அவரது வீழ்ச்சியில் இருக்கும் கவர்ச்சிதான் அவர் இன்றும் பேசப்படுவதின் காரணமோ என்று சில சமய்ம் தோன்றுகிறது.

பாபு மிகைநடிப்பு பாணியை பின்பற்றியவர். இல்லாத கொனஷ்டை எல்லாம் செய்தார். நடிப்பு என்பதை விட அதை எப்படி ஸ்டைலாக செய்ய முடியும் என்பதில்தான் அவரது முனைப்பு இருந்தது. அவர் எழுதிய கதைகளும் (பாவமன்னிப்பு, தட்டுங்கள் திறக்கப்படும்…) அதி-மெலோட்ராமா கதைகள்தான். எனக்குத் தெரிந்து அப்படி மிகைநடிப்பும் கொனஷ்டையும் செயற்கையாகத் தெரியாத ஒரே நடிகர் எம்.ஆர். ராதாதான். இன்று பாபுவின் நடிப்பு பாணி காலாவதி ஆகிவிட்டது, அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. (சபாஷ் மீனா, மணமகன் தேவை என்ற வெகு சில திரைப்படங்கள்தான் நினைவு வருகிறது)

ஆனால் அவரது வாழ்க்கை! சோற்றுக்கே திண்டாட்டம், வேலை கிடைக்காமல் தற்கொலை முயற்சி என்ற நிலையில் ஆரம்பித்து சில ஆண்டுகளாவது சூப்பர்ஸ்டாராக இருந்தார். சபாஷ் மீனாவில் நடிக்க சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம். சகோதரி திரைப்படம் மகாசோகம், நகைச்சுவை வேண்டுமென்று இவரைக் கேட்க அன்று ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டாராம். கவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை எடுத்த கண்ணதாசனை கவலையே உருவான தயாரிப்பாளர் என்ற நிலைக்கு தள்ளிவிட்டாராம். (பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை இவருக்கு திருப்பி செய்ததை பிராரப்த கர்மம் என்றுதான் சொல்ல வேண்டும்.) எம்ஜிஆரை வைத்து மாடி வீட்டு ஏழை திரைப்படம் எடுக்க முயற்சியில் பெரிய அடி, மணந்த பெண் வேறொருவனைக் காதலித்தாள் என்று தெரிந்ததும் அவனோடு சேர்த்து வைத்தது இன்னொரு அடி, சொந்தப் படம் எடுத்து பணம் எல்லாம் போனது இன்னொரு அடி, மீண்டும் சோற்றுக்கே திண்டாட்டம் என்ற நிலையில் முடிந்திருக்கிறார். குடிதான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். கடைசி காலத்தில் தேங்காய் சீனிவாசன், பாலாஜி, எம்எஸ்வி எல்லாரும் உதவி இருக்கிறார்கள்.

முகிலின் கண்ணீரும் புன்னகையும் புத்தகம் இந்த நிகழ்ச்சிகளைத்தான் விவரிக்கிறது. அதுவும் எம்.ஜி. சக்ரபாணியுடன் போட்ட சண்டை, கடைசி காலத்தில் எம்ஜிஆரை சகட்டுமேனிக்கு தாக்கி எழுதியது எல்லாம் விவரமாக இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம்.

என் கண்ணில் பாபு அவரது பாடல்களால் மட்டும்தான் நினைவு கூரப்படுவார்.

Manorama
குன்றில் குமார் என்பவர் எழுதிய ஆச்சி மனோரமா (2016) என்ற புத்தகத்தைப் பற்றி தனியாக எதுவும் எழுதுவதற்கில்லை. மனோரமாவின் வாழ்க்கையை ஏறக்குறைய துணுக்குகளாகவே எழுதி இருக்கிறார், தீவிர தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்