வாசந்தியின் “ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன”

“Coming of Age ” புத்தகங்கள் என்று ஒரு genre உண்டு. தினம் தினம் டீனேஜர்கள் பெரியவர்களாக மாறிக் கொண்டிருக்கும் மாறாத விந்தையை விவரிக்கும் புத்தகங்கள். வாஸந்தி அந்த genre-இல் எழுதி இருக்கும் ஒரு புத்தகம் இது.

உண்மையை சொல்லிவிடுகிறேன், இந்த புத்தகம் எனக்கு சுமார்தான். இத்தனைக்கும் நல்ல வடிவமைப்பு, மாற்றத்தை நோக்கி சீராக செல்லும் கதை என்று பல நல்ல அம்சங்கள் உள்ள கதைதான். ஆனால் சுவாரசியம் குறைவு. ஜெயமோகன் இதை இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – குறிப்பிடவில்லை என்றால் இதைப் பற்றி என்றாவது வாஸந்தி பற்றி ஒரு பதிவு எழுதி அதில் ஒரு சின்ன பாராவாக எழுதி இருப்பேன். அவர் சொல்லி இருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எனக்கொரு ஆசை.

சிம்பிளான கதை. கொஞ்சம் படிப்பு வராத பையன். மேல் தட்டு குடும்பம். மக்கு என்று எல்லாரும் கொஞ்சம் இளக்காரமாகப் பார்க்கிறார்கள். அம்மாவுக்கு தெரிந்தவர்கள் பையன் எல்லாம் டாக்டர், எஞ்சினியர் என்று இருக்கும்போது இவன் இப்படி இருக்கிறானே என்று மிகவும் வருத்தம். பையனுக்கு தோட்டம் என்றால் கொஞ்சம் ஆசை. அவர்கள் தோட்டத்தை பராமரிக்கிறான். அம்மாவைப் பற்றி ஊரில் தவறான பேச்சு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மூல காரணம் தான்தான் என்று தெரிந்து கொண்டு பையன் ஊரை விட்டு ஓடப் பார்க்கிறான். அவனை தடுத்து நிறுத்தும் அம்மாவும் அப்பாவும் பையன் பெரியவன் ஆகிவிட்டான் என்று தெரிந்துகொள்கிறார்கள்.

Coming of Age என்பதை subtle ஆக சொல்லி இருக்கிறார். வடகிழக்கு மாநில பின்புலம் (ஷில்லாங் என்று நினைக்கிறேன்) கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக ஆக்குகிறது. இன்னும் பெரிதாக டெவலப் செய்திருந்தார் என்றால் நன்றாக வந்திருக்கலாம். இப்போது சுவாரசியம் பற்றவில்லை.

படிக்கலாம்தான். ஆனால் படிக்காவிட்டாலும் பெரிய நஷ்டம் இல்லை.

2 thoughts on “வாசந்தியின் “ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.